search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே பாரத்"

    • சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
    • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் தற்போது 39 வழித் தடங்களில் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகை இயக்கப்படுகிறது. முற்றிலும் சேர்கார் பெட்டிகளாக அதாவது அமர்ந்து செல்லும் வகையில் மட்டுமே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தில் சென்னை-கோவை, எழும்பூர்-நெல்லை, சென்னை-மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வந்தே பாரத் ரெயில் படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலை மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முதலில் டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா, மற்றும் டெல்லி-பாட்னா போன்ற சில நகரங்களுக்கு இடையே இரவு நேர பயணங்களுக்காக இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் 10 செட் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். மார்ச் மாதம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    ஆய்வுக்கு பிறகு ஏப்ரல் முதல் அல்லது 2-வது வாரத்தில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், "படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில்கள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. தரம் மற்றும் அதன் ஆயுட்காலம் சர்வதேச தரத்தில் இருக்கும்.

    அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்படும். படுக்கை வசதி பெட்டிகள் அனைத்தும் 'கவாச்' அமைப்புடன் பொறுத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒவ்வொரு ரெயிலும் 16 ஏ.சி. பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அதில் 850 படுக்கை வசதிகள் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
    • கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் கோவை-சென்னை, நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களிடம் வரவேற்பு காணப்பட்டது.

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தொழில் விஷயமாகவும், வேலைக்காகவும், படிப்பிற்காகவும் பலரும் சென்று வருகின்றனர்.

    எனவே கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் போன்று கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று கோவை-பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று முதல் கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 5 மணிக்கு கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க அதிகாலையிலேயே முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ரெயிலில் பிளாட்பாரத்திற்கு வந்ததும், பயணிகள் அனைவரும் டிக்கெட் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர்.

    இந்த ரெயிலில் பயணம் செய்வது வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்த பயணிகள் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டனர். ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும், பயணிகளுக்கு ரெயில் நிர்வாகம் சார்பில் காபி மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டன.

    ரெயிலில் பயணம் செய்த பயணிகள் செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கோவையில் இருந்து 5 மணிக்கு புறப்பட்ட ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக காலை 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

    மறுமார்க்கமாக அங்கிருந்து 1.40 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8 மணிக்கு கோவையை வந்தடைய உள்ளது. கோவை-பெங்களூரு இடையேயான 380 கி.மீ தொலைவை 6 அரை மணி நேரத்தில் இந்த ரெயில் சென்றடைகிறது. இன்று முதல் தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் கோவை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. காலை 5 மணிக்கே கோவையில் இருந்து வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் சொகுசு பெட்டிகள், சிறப்பு சொகுசு பெட்டிகள் என 2 வகையான பெட்டிகள் உள்ளன.

    சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு பயணிக்கு ரூ.940-ம், சிறப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1,860-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காபி, திண்பண்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ரெயில் 6 அரை மணி நேரத்தில் பெங்களூருவை சென்றடையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடர் மழையால் நடைமேடைகளில் வெள்ளம் புகுந்தது.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.

    இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.

    அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடர் மழையால் நடைமேடைகளில் வெள்ளம் புகுந்தது.

    20605 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர், 22628 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி எக்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    20636 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்  கொல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல்லில் இருந்து புறப்படும். கொல்லம்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது.

    நேற்று புறப்பட்ட எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக சென்று பாலக்காட்டில் நிறுத்தப்பட்டது.

    16127 சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ், 22627 திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 16321 நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், 16846 நெல்லை ஈரோடு ஆகிய 4 ரெயில்கள் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • புதிய ரெயில் 22 பெட்டிகளுடன் தயாராகி உள்ளது.
    • 12 தூங்கும் வசதியுடன் 2-ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக் கும்

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் நாடுமுழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏ.சி.யில் சொகுசு மற்றும் விரைவு பயணம் என்பதால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத்ரெயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை-திருநெல்வேலி. திருவனந்தபுரம்-காசர்கோடு உள்ளிட்ட வழித் தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் வந்தே பாரத்ரெயில் போன்று ஏ.சி. இல்லாமல் குறைந்த கட்டணத்தில் விரைவு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சென்னை ஐ.சி.எப்.பில் வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து ஆரஞ்சு நிறத்தில் 22 பெட்டிகளுடன் ரெயில் உருவாக்கப்படுகின்றன. முன்னும் பின்னும் 2 முனைகளிலும் என்ஜின்களுடன் இவை தயாரிக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இந்த 2 என்ஜின்கள் இயங்குவதால் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். ஐ.சி.எப்.பில் தயாரான இந்த முதல் ரெயில் ஏற்கனவே மேற்கு ரெயில்வேக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது மும்பை-அகமதாபாத் இடையே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஐ.சி.எப்.பில் 2-வது ரெயில் தயாராகி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வடகிழக்கு அல்லது வடக்கு மத்திய ரெயில்வே மண்டலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ரெயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எனினும் வந்தே பாரத் ரெயில் போன்று உள்ள இந்த ரெயிலுக்கு அம்ருத் பாரத் என்று வைக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, இந்த புதிய ரெயில் 22 பெட்டிகளுடன் தயாராகி உள்ளது. மணிக்கு 130 கி.மீட்டர் வரை வேகமாக செல்லும். இதில் 12 தூங்கும் வசதியுடன் 2-ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக் கும். இந்த ரெயிலுக்கு இன்னும் முறைப்படி பெயர் வைக்கப்படவில்லை. எனினும் 'அம்ருத் பாரத்' என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    • முதல்முறையாக ஏறியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
    • சமூக ஊடக தளமான எக்ஸ் இல், சீதாராமன், "கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சவாரி செய்கிறேன்" என கூறினார்.

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

    2022 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட அரை அதிவேக ரெயிலில் தான் முதல்முறையாக ஏறியதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    சமூக ஊடக தளமான எக்ஸ் இல், சீதாராமன், "கொச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு #வந்தேபாரத்தில் சவாரி செய்கிறேன். வந்தே பாரத் செப்டம்பர் 2022 இல் @PMOIndia @narendramodi ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு அதில் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது'' என பதிவிட்டுள்ளார்.

    • வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
    • திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் பயணிகள் முழு அளவில் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை குறைப்பதற்காக வந்தே பாரத் சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து 5 நாட்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பின. பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வரும் நிலையில் தற்போது சபரிமலை சிறப்பு ரெயிலாகவும் வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது.

    சபரிமலை பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வசதியாக வந்தே பாரத் சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை வழியாக செல்லும் வகையில் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் வியாழக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு பகல் 2.15 மணிக்கு சென்றடையும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

    வந்தே பாரத் சிறப்பு ரெயில் வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும். திருநெல்வேலியில் இருந்து அதே நாளில் புறப்பட்டு எழும்பூர் வந்து சேரும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் தெரிவித்து உள்ளார்.

    • வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கியது.
    • மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க எதிர்ப்பு.

    வந்தே பாரத் ரெயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது, படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரெயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

    தற்போது ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐ.சி.எப். உருவாக்கிய நிலையில், புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்?

    மின்சாரம், கேஸ். தண்ணீர் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐ.சி.எப் இலவசமாக வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யானாபுரம் நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் செயலாளர் வக்கீல் வெ.ஜீவக்குமார் விளக்க உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே அனுமதிக்கப்பட்டுள்ள, இரட்டை அகல ரெயில்பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்-அரியலூர் புதிய ரெயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    நவக்கிரக தலங்கள், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்க வேண்டும்.

    சென்னையை போல், தஞ்சாவூர் ரெயில் நிலையங்களில் முதியோர்களை அழைத்துச் செல்லும் பேட்டரி காருக்கான கட்டணத்தை ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.

    விரைவு ரெயில் என்ற பெயரில் கட்டணங்களை உயர்த்தியுள்ள ரயில்வே நிர்வாகம், கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் பயணிகள் ரெயில் என்ற பெயரில் இயக்கி உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தரமாக நடைபெற ெரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    நடைபெறும் வேலைகள் குறித்து அறிவிப்பு பலகையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சங்க நிர்வாகிகள் கண்ணன், பேராசிரியர் திருமேனி, வக்கீல்கள் உமர்முக்தர், பைசல் அகமது, உழவர் செல்ல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நடப்பு நிதியாண்டில் 108.23 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • தகவல் மற்றும் வணிகர்களால் இந்த ெரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    கோவை - சென்னை இடையே செல்லும் வந்தே பாரத் ெரயில் சேவை, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு ஜவுளி மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள், தகவல் மற்றும் வணிகர்களால் இந்த ெரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.ெ

    ரயில் எண் (20643) சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் நடப்பு நிதியாண்டில் 108.23 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.ெரயில் எண் (20644) கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சில் நடப்பு நிதியாண்டில் 104.60 சதவீத பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    • ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது.
    • ரெயில்கள் மீது கல் வீசிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது. இந்த மாதத்தில் வந்தே பாரத், ஏர்நாடு எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், நேத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவங்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிந்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

    வந்தே பாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தில் அந்த ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் மாஹே ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரெயில்கள் மீது கல்வீசிய சைதீஸ், சாதிக் அலி(30), மொய்து(53) ஆகிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    • சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    சென்னை:

    சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்து உள்ளதால் வரும் நாட்களில் பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

    அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை- அரக்கோணம் இடையே வேகம் அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பெங்களூர் செல்லும் ரெயில்களின் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும். இப்போது வந்தே பாரத் ரெயிலில் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன.

    இது 4 மணி நேரமாக குறையும். சதாப்பதி அல்லது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் தற்போதுள்ள 6 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறையும். அரக்கோணம்-ஜோலார்பேட்டை இடையே பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் 130 கி.மீ. வேகத்தில் 124 ரெயில்களை இயக்க அனுமதி அளித்து உள்ளது.

    இதுபற்றி ரெயில் இயக்குனரகம் என்ஜின் டிரைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    எல்.எச்.பி. பெட்டிகள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதே வேளையில் ஐ.சி.எப். வடிவமைப்பு பெட்டிகள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடியவை. பல ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இருப்பதால் பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம் குறைக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளதால் படிப்படியாக ஒவ்வொரு ரெயில்களையும் அதிவேகத்தில் இயக்க முடிவு செய்யப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

    பெங்களூர் மற்றும் கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில்கள் சென்னை மற்றும் அரக்கோணம் இடையே 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதையை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பதன் மூலம் மற்ற ரெயில்களும் சிறந்த வேகத்தில் இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
    • புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    புதுச்சேரிக்கு ரெயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புதுவை ரெயில்நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரெயில்நிலையம் அழகுற மேம்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.

    இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

    ×